நெருங்கும் கனமழை! சென்னை மக்களே அலர்ட்! இந்த பொருட்களை எல்லாம் உடனே வாங்கி வையுங்கள்.

நெருங்கும் கனமழை! சென்னை மக்களே அலர்ட்! இந்த பொருட்களை எல்லாம் உடனே வாங்கி வையுங்கள்.

நெருங்கும் கனமழை! சென்னை மக்களே அலர்ட்!  இந்த பொருட்களை எல்லாம் உடனே வாங்கி வையுங்கள்.

Subscribe to Makkal Media | மக்கள் மீடியா : 

வங்கக் கடல் பகுதியில் இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னை அருகே நிலை கொள்ளும் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.



கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அக்டோபர் 15ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்து முக்கியமான விஷயம் பால்.. அதிலும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் பால் கட்டாயம் தேவைப்படும். கடந்த காலங்களிலும் கூட மழை பெய்யும் போது பால் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர். பால் ஓரிரு நாட்களில் கெட்டுப் போகும் விஷயம்.. மின்சாரம் இருக்காது என்பதால் பிரிட்ஜிலும் வைத்துச் சேமிக்க முடியாதே.. அப்போ என்ன செய்வது என்று கேட்கலாம்..

பால்: ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் பாலை விற்பனை செய்கிறது. இந்த பாலை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.. வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாது.. எனவே, இதை வாங்கி வைக்கலாம்.. அல்லது பால் பவுடரை கூட நீங்கள் எமெர்ஜென்சிக்கு வாங்கி வைக்கலாம்.

இது முக்கியம்: டார்ச் லைட் மற்றும் பேட்டரி தேவைப்படும் அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மேலும், மொபைல் போன் சார்ஜ் எப்படியும் சில மணி நேரம் மட்டுமே தாங்கும். எனவே, பேக்அப்பிற்கு ஒரு பவர் பேங்க்கை வைத்துக் கொள்ளுங்கள். மொபைல் மட்டுமின்றி, இந்த பவர்பேங்க் கூட முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.