பிக்பாஸ் 8: முத்துக்குமரன் குறித்து பெண்கள் அணியின் கடுமையான கோபம்! - என்ன நடப்பது?!

நுணுக்கமாக செயல்பட்டு ரவீந்தரின் இடத்தை முத்துக்குமார் கிட்டத்தட்ட கைப்பற்றியுள்ளார்.

பிக்பாஸ் 8: முத்துக்குமரன் குறித்து பெண்கள் அணியின் கடுமையான கோபம்! - என்ன நடப்பது?!

Subscribe to Makkal Media | மக்கள் மீடியா :

பிக் பாஸ் வீடு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது!  


நேற்று முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு மிகவும் உறுதியாக எதிர்மறையான முறையில் செயல்பட்டார். அதுமட்டுமல்ல, அவர் பெண்கள் அணியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு பிரச்னைகளை கிளப்பினார். முத்துக்குமரனின் இந்த நடவடிக்கைகள் பெண்கள் அணிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது அவை நேற்றைய எபிசோடை வலுப்படுத்தியது நுணுக்கமாக செயல்பட்டு, ரவீந்தரின் இடத்தை முத்துக்குமார் கிட்டத்தட்ட கைப்பற்றியுள்ளார். இன்றைய எபிசோடுகளின் ப்ரொமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ப்ரோமோ 1 & 2:

முதல் இரண்டு ப்ரோமோகளும் ஒரு டாஸ்க்கை மையமாகக் கொண்டு முன்னேறுகிறது. இன்று பிக் பாஸ் முக்கியமான டாஸ்க்கை போட்டியாளர்களிடம் அறிவிக்கிறார். அந்த டாஸ்க்கிற்காக முத்துக்குமரனும் ஆனந்திக்கும் இடையே மோதல் ஏற்படும். அப்போது, முத்துக்குமரனின் நடவடிக்கைகள் பெண்கள் அணிக்கு கடுமையான கோபம் மற்றும் எரிச்சலுக்கு காரணமாகின்றன. நேற்றைய எபிசோடில், பெண்கள் அணியும் முத்துக்குமரனுக்கு எதிராக கடுமையான கோபத்தில் இருந்தனர்.

இன்றைய வாக்குவாதம் அந்த கோபத்தை இன்னும் அதிகமாகக் கடுமையாக்கியிருக்கிறது எனத் தோன்றுகிறது. முத்துக்குமரனின் மீது பெண்கள் அணியின் கோபம் என்ன ஆகின்றதென பொறுத்து பார்க்கலாம். இரண்டாவது ப்ரோமோவில், ஜெஃப்ரி ஒரு விஷயம் சொல்லத் தொடங்குகிறார். அப்போது வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர். இந்த செயலால் ஜெஃப்ரி மனமுடைந்து கண்கள் கலங்குகிறார். தவறை உணர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் ஜெஃப்ரியிடம் மன்னிப்பு கேட்டார்களா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம் .

ப்ரோமோ 3:

தர்ஷாவுக்கும் ஆண்கள் அணிக்கும் இடையில் ஏற்கெனவே ஒரு வாக்கு  வாதம் நிலவுகிறது. தர்ஷா வடசென்னை தனுஷை போல ஆண்கள் அணியினருக்காக விசுவாசமாக  இருக்கிறாளே என்றாலும், அவரது எண்ணங்கள் முழுவதும் பெண்கள் அணியினர்  மீதே உள்ளன. இப்படி, தர்ஷா ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு பல செயல்களைச் செய்து வருகிறார். கடந்த எபிசோடில், பெண்கள் அணிக்காக அவர் ஒரு சிறு புன்முறுவலை ஏற்படுத்தினார்.

அது ஜெஃப்ரிக்கும் தர்வுக்கும் இடையே பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. தர்ஷாவை மையமாகக் கொண்டு, ஆண்கள் அணியினர் இடையே ஏதோ ஒரு விஷயம் சண்டையை கிளப்புகிறது. இதன் மூலம் அருண் பிரசாத்திற்கும், அர்ணவிற்கும் இடையேவும் மோதலும் ஏற்படுகிறது!