Gankai Aatril songs lyrics from Aayiram Nilave Vaa tamil movie

கங்கை ஆற்றில் பாடல் வரிகள்

Gankai Aatril Lyrics - கங்கை ஆற்றில்

Movie Aayiram Nilave Vaa Movie Name (in Tamil) ஆயிரம் நிலவே வா
Year 1983 Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers P. Susheela

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் போலவே
வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே
பொய்யாய்க் கொண்டாள்
ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்

பெண் : தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் மானையே
அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே
இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்

பெண் : பொய் நம்பிக்கை அங்கே
வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும்
வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

 

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com